உள்ளூர் செய்திகள்
.

நாமக்கல்லில் ஒரேநாளில் 13 ஆயிரத்து 449 பேருக்கு தடுப்பூசி

Published On 2022-01-23 08:10 GMT   |   Update On 2022-01-23 08:10 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 19 ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 13 ஆயிரத்து 449 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடபப்ட்டது.
நாமக்கல்:

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 18 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 6 லட்சத்து 99 ஆயிரத்து 772 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே நேற்று 19-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 490 மையங்களில் நடைபெற்றது. இந்த முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். 

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் நேற்று ஒரே நாளில் 13,449 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News