உள்ளூர் செய்திகள்
சேலத்தில் இரும்பு கட்டிங் மெஷின் திருடியவர் கைது
சேலத்தில் இரும்பு கட்டிங் மெஷினை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் டவுன் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 26). சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான இரும்பு கேபிள் கட்டிங் செய்யும் மிஷின் திருட்டு போனது. இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து ராஜேஷ் சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில் இளம்பிள்ளை அருகே உள்ள ரெட்டி மணியக்காரனூர், மஜித் தெரு பகுதியை சேர்ந்த ஜாபர் அலி (48) என்பவர்தான் அந்த மெஷினை திருடியது தெரியவந்தது.