உள்ளூர் செய்திகள்
சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் கோடிசக்தி விநாயகருக்கு மாலை, மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்து வைத்தார்.
இதில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கணேஷ்குமார், ஆனந்தவள்ளி, காளீஸ்வரி, கர்ணிகா ஆகியோர் செய்திருந்தனர்.