உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

நடுரோட்டில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் - கல்லூரி மாணவர் கைது

Published On 2022-01-19 10:01 GMT   |   Update On 2022-01-19 10:01 GMT
நடுரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் கல்லூரி மாணவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் கல்லூரி சாலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா அருகே உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். 

நேற்று அவர் கொங்கணகிரி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதுடன் மானபங்கப்படுத்த முயற்சி செய்துள்ளார். 

இதுகுறித்து அந்த இளம்பெண் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் உத்தரவின் பேரில் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

விசாரணையில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த ஆசிக் முகமது (வயது 20) என்பதும், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். நடுரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் கல்லூரி மாணவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News