உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

சர்க்கரை ஆலை அதிகாரி வீட்டில் நகை-பணம் திருட்டு

Published On 2022-01-19 09:57 GMT   |   Update On 2022-01-19 09:57 GMT
தஞ்சையில் சர்க்கரை ஆலை அதிகாரி வீட்டின் கதவை உடைத்து ரூ.4.73 லட்சம் நகை-பணம் திருடப்பட்டது.
தஞ்சாவூர்:

தஞ்சை புதுக்கோட்டை ரோடு தெய்வா நகரை சேர்ந்தவர் ஜெயராமன் 
(வயது 55). இவர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் சுகர் கண்ட்ரோல் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 14ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். 
திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு 
இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு ரூ.60 ஆயிரம் 
ரொக்கம், 21 பவுன் தங்க நகைகளை காணவில்லை. வீட்டில் ஆள் 
இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை 
திருடிச் சென்றது தெரியவந்தது. 

இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 73 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயராமன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீசுக்கு 
தகவல் தெரிவித்தார். 

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி 
தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 
பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை 
சேகரித்தனர். மோப்பநாய் வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு 
சிறிது தூரம் ஓடி சென்று திரும்பியது. 

இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 
மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் 
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News