உள்ளூர் செய்திகள்
பொறுப்பாளர்கள் தேர்வு.

பட்டதாரி ஆசிரியர் கழக தேர்தல்

Published On 2022-01-19 09:55 GMT   |   Update On 2022-01-19 09:55 GMT
பட்டதாரி ஆசிரியர் கழக புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
திருவாரூர்:

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்தல் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக். பள்ளியில் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் செங்குட்டுவன் தேர்தல் நடத்தும் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.

திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் ஆகிய வட்டங்களில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வட்ட பொறுப்பாளர்கள் தேர்தலில் பங்கேற்றனர்.

தேர்தலில் ஆர்.முத்துவேல் மாவட்டத் தலைவராகவும், க.கருணாகாளிதாசன் மாவட்டச் செயலாளராகவும், எஸ்.கார்த்தி மாவட்ட பொருளாளராகவும், ஆர்.ஆதித்தன் மாவட்ட அமைப்புச் செயலாள ராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கரோலின் அற்புத ராணி மாவட்ட மகளிர் அணிச் செயலாளராகவும், வி.சி.ரமேஷ்குமார், ஜெ.மணிவண்ணன், பா.ரகு, எஸ்.சுபாஷ் சந்திரபோஸ், வ.இளங்கோவன், கே.சந்திரபோஸ், டி.மணிகண்டன் ஆகியோர் மாநில பொதுக்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிறைவாக மாவட்ட பொருளாளர் எஸ். கார்த்தி நன்றி கூறினார்.
Tags:    

Similar News