உள்ளூர் செய்திகள்
திருவாரூர் அருகே எண்கண் கோவிலில் தைப்பூசத் திருவிழா நடந்தது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் எண்கண் சுப்ரமணிய சுவாமி கோவிலில்
தைப்பூச விழா நடைபெற்றது.
கடந்த 9-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய தைப்பூச
விழாவின் 10 நாளான நேற்று காலை வள்ளிதேவசேன சமேத சண்முகபெருமானுக்கும், சுப்ரமணியருக்கும் எண்ணெய் காப்பு மண்டபத்தில் மகா அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து சண்முகபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து
அலங்கார தீபம், சோடச உபச்சாரங்கள் பஞ்சார்த்தி தீபாராதனை நடைப்பெற்றது.
பின்னர் சண்முகர் முன்னோட்டம், பின்னோட்டமாக ஆடியபடி பிரகார
வலம் வந்து வசந்த மண்டபத்திற்கு சென்று மகா தீபாரதனை
நடைபெற்றது.
தொடர்ந்து சுப்ரமணியர் ரிஷப வாகனத்தில் வைக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வீதியுலா
சென்று தீர்த்தவாரி நடைபெற்றது.