உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-19 09:17 GMT   |   Update On 2022-01-19 09:17 GMT
சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள காந்திஜி கலையரங்கம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மத்திய அரசை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
சிவகிரி:

சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள காந்திஜி கலையரங்கம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மத்திய அரசை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 

மத்திய அரசு குடியரசு தின அணி வகுப்பில் தமிழக ஊர்தியை இடம் பெற அனுமதி மறுத்துள்ளதை கண்டித்தும், தமிழக ஊர்தியை அனுமதிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிவகிரி கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 

தென்காசி மாவட்ட செயலாளர் இசக்கிதுரை சிறப்புரையாற்றினார். 

நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் அருணாசலம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைத்தலைவர் வேல் முருகன், இளைஞர் மன்ற பொருளாளர் பால்சாமி, தொண்டரணி பொறுப்பா ளர் மதன்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News