உள்ளூர் செய்திகள்
கைது

மதுரை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது

Published On 2022-01-18 11:28 GMT   |   Update On 2022-01-18 11:28 GMT
மதுரை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை நகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போனது. இதையடுத்து திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் மதுரையை சேர்ந்த ரமேஷ், தனுஷ்கோடி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த கும்பலில் முக்கிய நபரான மதுரை கீரைத்துறை மேலத்தோப்பை சேர்ந்த சரவணன்(வயது 20) தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் சரவணனை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News