உள்ளூர் செய்திகள்
கே.வி.குப்பம், திருவலம் பகுதியில் 20-ந் தேதி மின்தடை
கே.வி.குப்பம், திருவலம் பகுதியில் 20-ந்தேதி மின்தடை செய்யப்படும் என மின்வாரியத்துறையினர் அறிவித்துள்ளனர்.
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள கார்ணாம் பட்டு மற்றும் வடுகந்தாங்கல் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந்தேதி மின் சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்பாடி வள்ளிமலை, பொன்னை, விண்ணம்பள்ளி, அம்முண்டி, திருவலம் கார்ணாம் பட்டு, கரிகிரி, சேர்க்காடு, அம்மோர் பள்ளி, மகிமண்டலம், தாதிரெட்டி பள்ளி, முத்தரசி குப்பம்,
பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு மற்றும் பி.கேபுரம், கே.வி குப்பம், மேல்மாயில், வடுகந்தாங்கல், பசுமாத்தூர், பள்ளத்தூர், பனமடங்கி, காளாம் பட்டு, மாளிய பட்டு,
செஞ்சி, லத்தேரி, திருமணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.