உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடியில் முகக்கவசம் அணியாத 610 பேருக்கு அபராதம்

Published On 2022-01-18 09:36 GMT   |   Update On 2022-01-18 09:36 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவும் வகையில் முக கவசம் அணியாத 610 பேருக்கு போலீசார் ரூ.1,22,000 அபராதம் விதித்துள்ளனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முககவசம் அணியாததாக மொத்தம் 610 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 1,22,000- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நம்மையும் காப்பாற்றி, நம்மால் பிறருக்கு தொற்று பரவாமல் பிறரையும் காப்பாற்ற வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News