உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தென்காசி மாவட்டத்தில் மது விற்ற 19 பேர் மீது வழக்கு

Published On 2022-01-18 06:38 GMT   |   Update On 2022-01-18 06:38 GMT
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் மது விற்றதாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 363 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நெல்லை:

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

நேற்று ஒரே நாளில் மது விற்றதாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து 363 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News