search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seized"

    • கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
    • அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 31 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 13 கிலோ பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 31 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 13 கிலோ பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டார்.

    அதேபோல் வேலாயு தம்பாளையம்-நொய்யல் செல்லும் சாலையில் உள்ள புங்கோடை பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டபோது, தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பாப்பன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி(வயது 57) என்பவர் கடைகளுக்கு சப்ளை செய்ய வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசார ணையில் பெங்களூருவில் இருந்து, வாங்கி வந்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவி த்தார். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தர்மபுரி வாலிபர் கைது
    • ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறைக்குள் தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா? என போலீசார் அடிக்கடி ஆய்வு செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று சிறையின் நுழைவுவாயில் அருகே சந்தேகம்படும்படி நின்றிருந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    எனவே போலீசார் அவரை சோதனை செய்து பார்த்தனர். இதில் அவர் ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக வந்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன், ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த கூலிதொழிலாளி கிரி(வயது 19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
    • விற்பணை செய்வது கண்டறி யப்ப ட்டால் அக்கடை உரிமை யாளர்மீது தக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.

     புதுக்கோட்டை, 

    மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா ஆணை யின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து ஆய்வு குழு மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மேலும் இதுகுறித்து பள்ளி மாணவ ர்களிடையே விழிப்புணர்வு வழ ங்கிடவும் அறிவுறுத்த ப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, ஆலயவயல், நகரப்பட்டி ஆகிய பகுதிகளில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவல ர்வசந்தகுமார் , உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்கு மார்ஆகியோர்அடங்கிய ஆய்வுக்குழு மூலம் 6 கடைகளில் ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது. இதில் ஆலவயல் அரசு மேல்நிலை ப்பள்ளி அருகில் அமைந்து ள்ள மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பணை செய்தது கண்டறி யப்பட்டது. அக்கடை உரிமையாளருக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு புகையிலைப் பொ ருட்கள் கைப்பற்ற ப்பட்டது.

    மேலும் இதுபோன்று புதுக்கோட்டை மாவ ட்டத்தில் பள்ளி அருகில் அமைந்துள்ள கடைகளில் தொடர்ந்து இக்குழு ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டு புகையிலைப் பொருட்கள் விற்பணை செய்வது கண்டறி யப்ப ட்டால் அக்கடை உரிமை யாளர்மீது தக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.

    • உரிய அனுமதி இல்லாமல் 16 யூனிட் கற்களை கடத்தியது அம்பலம்
    • மாவட்ட புவியியல் சுங்கத்துறை வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் நடவடிக்கை

    கோவை,

    தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடி அருகே கோவை மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரிகளில் உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு 16 யூனிட் கற்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் அந்த 2 லாரி களையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர் இதுகுறித்து கேஜிசாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.49.36 லட்சம் அபராதம்- வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
    • சோதனைச்சாவடி எல்லையில் தீவிர கண்காணிப்பு

    கோவை,

    கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவு கனிம வளங்கள் கடத்தி செல்லப்படுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் பாரம் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவுப்படி, கோவை மேற்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் க.க.சாவடி சோதனைச் சாவடி அதிகாரிகள், எல்லைப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    உரிய ஆவணங்கள் இன்றி செல்லும் வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்கின்றனர். அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு, மோட்டார் வாகன சட்டப்படி, உரிய அபராதம் விதித்து வருகின்றனர்.

    எவ்வித நெருக்கடிக்கும் ஆட்படாமல், தயவுதாட்சன்யமன்றி இந்த அதிரடி நடவடிக்கைகயை எடுத்து வருகின்றனர்.

    நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, அதிக பாரம் ஏற்றிச் சென்றதாக கடந்த ஜூலை மாதம் 64 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.26.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஆகஸ்ட் மாதம் 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.11.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.7.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    நடப்பு மாதம் இதுவரை 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3.86 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் 123 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.49.36 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இதுபற்றி வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறிய தாவது:- கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் விவரம், கனிம வளத்துறை அதிகாரிகளால் க.க.சாவடி சோதனைச் சாவடிக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதனை பார்வையிட்டு, கனிம வளங்கள், வாகனங்களில் ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இச்சோதனைச் சாவடியை பொறுத்தவரை, சரக்கு வாகனங்கள், கனிம வளங்களை ஏற்றிச்செல்வது தொடர்பாக எவ்வித வாகன பைலட்களும் இங்கு வருவதில்லை.

    அதுபோன்ற நபர்களால் எவ்வித தொந்தரவும் இச்சோதனைச் சாவடிக்கு ஏற்படவில்லை. இங்குள்ள அதிகாரிகள், எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.

    கூடுதல் எடை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், முறையாக எடை போடப்பட்டு, அவ்வாகனங்களுக்கு பி.ஓ.எஸ் எந்திரம் வழியாக இணக்க கட்டணம் (அபராதம்) விதிக்கப்படுகிறது. தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அரவக்குறிச்சி அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.17 லட்சம் பறிமுதல்
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

    கரூர் 

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியத்திலுள்ள 20 ஊராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நிலங்கள் பதிவு செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென்று சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் முன் வாயில் கதவை அடைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அலுவலகத்தில் சார்பதிவாளர் சக்திவேல் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளே இருந்தனர்.

    இந்த சோதனையில் கக்கில் வராத ரூ.1.17 லட்சம் கைப்பற்றப்பட்டது.

    இது தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள், பத்திர எழுத்தர்கள் உள்ளிடோரிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைப்பற்றப்பட்ட ரூ. 1,17,500 க்கு சரியான விளக்கம் அளிக்காததால் சார்பதிவாளர் சக்திவேலை கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகம் படி அறிவுறுத்திச் சென்றனர்.

    தீபாவளி பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், அரவக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறையினரின் திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழகத்திலிருந்து உரிய அனுமதி இல்லாமல் கற்களை கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
    • சுரங்கத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

    கோவை,

    தமிழகத்திலிருந்து உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கற்களை லாரிகளில் கடத்தி செல்வதாக சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கிணத்துக்கடவு வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடியில் சுரங்க துறை உதவி புவியியலார் பாலகிருஷ்ணன் தலைமையில் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வழியாக கேரள மாநிலத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் கற்களை ஏற்றிச் சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போல சுரங்க துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள், அந்த வழியாக உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கற்களை கடத்தி சென்ற 3 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

    வாளையார் சோதனை சாவடியில் சுரங்க துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக கேரள மாநிலத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் கற்களை ஏற்றி சென்ற 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கற்களை கடத்தி சென்ற 8 லாரிகளை சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 17 மூட்டைகளில் இருந்த சுமார் ரூ.95 ஆயிரம் மதிப்பிலான 245 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தாரமங்கலம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 17 மூட்டைகளில் இருந்த சுமார் ரூ.95 ஆயிரம் மதிப்பிலான 245 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையில் போலீசார் சோதனை செய்வதை அறிந்து அதன் உரிமையாளர்களான சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (37), லிங்கராஜ் (39) ஆகியோர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • போலீசார் வாகன சோதனை செய்தனர்.
    • ரூ.16 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்


    திருச்சி,அக்.15-


    திருச்சியை அடுத்த மணிகண்டம் பகுதியில் அளுந்தூர் மாரியம்மன் கோவில் அருகில் மணிகண்டம் போலீசார் வாகன சோதனை செய்தனர்.


    அப்போது சிவகாசியில் இருந்து 3 லாரிகள் வந்தது.அதனை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினார்கள். சோதனையில் 3 லாரிகளின் உள்ளே பார்த்த போது, அதில் எளிதில் தீப்பற்ற கூடிய வெடிப்பொருட்களை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டம் போலீசார் அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட 3 லாரி மற்றும் அதிலிருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.


    மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் 3 பேரை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் பிடிப்பட்ட லாரிகளில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள பண்டல் பண்டலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


    • ஏற்காட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதில் 5 மூட்டைகளில் சுமார் 45 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏற்காடு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (34). இவர் தனது ஆம்னி வேனில் பொம்மிடியில் இருந்து ஏற்காடு மலை கிராமங்களில் உள்ள கடைகளுக்கு மளிகை பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்.

    இவர் தனது ஆம்னி வேனில் மளிகை பொருட்களுடன் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இந்த தகவலை தொடர்ந்து ஏற்காடு போலீசார் நேற்று மஞ்சகுட்டை கிராமத்தில் தீவிர வாகன சோதனை செய்தனர். அப்போது மளிகை சரக்கு கொண்டு வந்த கார்த்திக்கின் ஆம்னி வேனை மஞ்சக்குட்டை கிராமத்திற்கு செல்லும் மலைப்பாதையில் வழிமறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் 5 மூட்டைகளில் சுமார் 45 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய ஏற்காடு போலீசார் போதை பொருட்களை கொண்டு வர பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • போக்குவரத்து அதிகாரிகள் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • ஏர் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகள் எச்சரிக்ைக விடுத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் ஒரு சில தனியார் பஸ்கள், அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் அதிக அளவு ஒலி எழுப்ப கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    அதனால் அந்த பஸ்சில் பயணம் செய்யும் பொதுமக்கள் மட்டுமின்றி சாலையில் செல்லும் பிற வாகண ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அதிகமான புகார்கள வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து இன்று மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷன் தலைமையில் வட்டார போக்குவ ரத்து ஆய்வாளர் சிவக்குமார்,அரசு போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து மேட்டுப்பாளையம் கோவை சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ், அரசு பஸ், பள்ளி, கல்லூரி பஸ்கள் என அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, ஒரு சில பஸ்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் அதிக அளவு ஒலி எழுப்ப கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து பஸ்களில் இருந்த ஏர் ஹாரன்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது மாதிரியான ஹாரன்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
    • வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

     வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தவுட்டுப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தபோது மோட்டார் சைக்கிள் உள்ள பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    அவற்றை பறிமுதல் செய்து விற்பனைக்கு கொண்டு சென்ற திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்( வயது 26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×