உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தருமபுரி மாவட்டத்தில் 30 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு

Published On 2022-01-16 07:44 GMT   |   Update On 2022-01-16 07:44 GMT
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாகபரவி வருவதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது.  இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 168 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. 

சிகிச்சையில் இருந்த 36 பேர் நேற்று நலமுடன் வீடு திரும்பினார். தருமபுரி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது. 

அதாவது இதுவரை 29 ஆயிரத்து 833 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டம் முழுவதும் இதுவரை 28 ஆயிரத்து 849 பேர் குணம் அடைந்துள்ளனர். 

281பேர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். தற்போது 658 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News