உள்ளூர் செய்திகள்
ஓட்டல் உரிமையாளர் வீட்டின் அருகே பிடிபட்ட 2 பாம்புகள்
குலசேகரம் அருகே ஓட்டல் உரிமையாளர் வீடு அருகே 2 பாம்புகள் பிடிபட்டது.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே படநிலம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் பிள்ளை. ஓட்டல் உரிமையாளர். இவரது வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் 2 பாம்புகள் சுற்றி திரிந்தது. இந்நிலையில் வீட்டில் உள்ள ஒருவர் குளியல் அறையில் குளிக்க சென்றபோது பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே இதுகுறித்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கிருந்த 2 பாம்புகளையும் லாவகமாக பிடித்தனர். அந்த பாம்புகளை குலசேகரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் 2 பாம்புகளையும் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இந்த சம்பவம் அப்குதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.