உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி
குடியாத்தம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பரிதாபமாக பலியானார்.
ஜோலார்பேட்டை:
குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
வளத்தூர் குடியாத்தம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் மார்க்கத்தில் சென்று ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் மாநிறத்தில் உள்ளார். சாம்பல் நிறத்தில் முழுக்கை சட்டை அந்துள்ளார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் பல்வேறு விசாரணை செய்து வருகின்றனர்.