உள்ளூர் செய்திகள்
அரிவாள் வெட்டு

வத்தலக்குண்டுவில் கட்சி அலுவலகத்தை சூறையாடி வாலிபருக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-01-09 08:30 GMT   |   Update On 2022-01-09 08:30 GMT
வத்தலக்குண்டுவில் கட்சி அலுவலகத்தில் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி வாலிபரை வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு-மதுரை மெயின் ரோட்டில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செல்வத்தின் அலுவலகம் உள்ளது. இங்கு கோட்டைபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் ராமகிருஷ்ணன் (வயது 22) ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 

நேற்று இரவு இந்த அலுவலகத்திற்குள் காசுக்கார தெற்குத்தெருவை சேர்ந்த ராஜா மகன் பாலா (36) என்பவர் அரிவாளுடன் உள்ளே புகுந்தார். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார். இதை தடுக்க வந்த ராமகிருஷ்ணனையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். படுகாயமடைந்த ராமகிருஷ்ணன் இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். 

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராமகிருஷ்ணனை மீட்டு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சேக்தாவுது வழக்குப்பதிவு செய்து அரிவாளால் வெட்டிய பாலாவை கைது செய்து பழனி சிறையில் அடைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News