உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2022-01-07 10:02 GMT   |   Update On 2022-01-07 10:02 GMT
தஞ்சையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28). மருந்து சரக்கு குற்றவாளி. இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. 

இதையடுத்து இவரின் குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 
குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு 
ரவளிப்பிரியா பரிந்தரை செய்தார்.
 
அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் ராஜேசை கைது செய்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
Tags:    

Similar News