உள்ளூர் செய்திகள்
காவிரி உரிமை மீட்புக்குழு ஆர்ப்பாட்டம்.

காவிரி உரிமை மீட்புக்குழு ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-06 10:49 GMT   |   Update On 2022-01-06 10:49 GMT
தஞ்சையில் கலெக்டர் அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்:

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும், நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்புக்குழு 
சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தின் போது கோரிக்கைகளை 
வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இதில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் 
குடந்தை அரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News