உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த வாலிபரின் கை விரல்கள் துண்டானது

Published On 2022-01-06 09:32 GMT   |   Update On 2022-01-06 09:32 GMT
நெல்லை சந்திப்பில் இறந்த முதியவரின் இறுதி ஊர்வலத்தில் வாலிபர் ஒருவர் பட்டாசு வெடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு கையில் வெடித்ததில் 3 விரல்கள் துண்டானது.
நெல்லை:

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் நேற்று உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். 

இவரது உடல் சிந்துபூந்துறை மின் மயான தகன மேடைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப் பட்டது. அப்போது பட்டாசும் வெடிக்கப்பட்டது. 

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட அவரது உறவினரான சுத்தமல்லியை சேர்ந்த பலவேசம் என்பவர் பட்டாசு வெடித்து கொண்டு இருந்தவர்களிடம் இருந்து பட்டாசை வாங்கி அவர் பற்ற வைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கையில் இருந்து விடுவிப்பதற்குள் பட்டாசு வெடித்தது. இதனால் அவரது கையில் 3 விரல்கள் துண்டாகி ரத்தம் கொட்டியது. 

உடனே அவரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News