உள்ளூர் செய்திகள்
ஆபத்தான பள்ளம்.

ஆபத்தான பள்ளத்தால் விபத்து அபாயம்

Published On 2022-01-05 09:53 GMT   |   Update On 2022-01-05 09:53 GMT
இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் ஏறி இறங்கும் போது நிலைதடுமாறி விழும் நிலை உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் காங்கயம் ரோடு ராஜீவ் நகர் பகுதியில் மழையின் காரணமாக சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. ஆனால் 2 மாதங்களாகியும் அந்த பள்ளம் சரிசெய்யப்படாமல் உள்ளது. 

இதனால் விபத்துக்கள் நிகழ வாய்ப்புள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் ஏறி இறங்கும் போது நிலைதடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே அதனை உடனே சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News