உள்ளூர் செய்திகள்
ராமதாஸ்

வேலுநாச்சியார்-கட்டபொம்மன் வீரத்தை போற்றுவோம்: ராமதாஸ் அறிக்கை

Published On 2022-01-03 09:42 GMT   |   Update On 2022-01-03 09:42 GMT
பன்மொழிப் புலமை, ராஜ தந்திரம் ஆகியவற்றில் சிறந்த வேலு நாச்சியார், இன்றைய மகளிர் முன்னேற்றத்திற்கு முன்னுதாரணம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வீரமங்கை வேலு நாச்சியாரின் 292-வது பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும், தேசப்பற்றையும் போற்றுவோம். வெள்ளையர்களை எதிர்க்க வட இந்திய மன்னர் கள் அஞ்சிய காலத்தில், 242 ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி ஆங்கிலேயப் படைகளை அழித்து வெற்றிகளை குவித்தவர்.

வீரத்தில் ஜான்சி ராணிக்கும் முன்னோடி வேலு நாச்சியார் தான். வேலு நாச்சியாருக்கு பிறகு 85 ஆண்டுகள் கழித்து தான் ஜான்சி ராணிக்கு ஆங்கிலேயரை எதிர்க்கும் துணிச்சல் வந்தது. பன்மொழிப் புலமை, ராஜ தந்திரம் ஆகியவற்றில் சிறந்த நாச்சியார், இன்றைய மகளிர் முன்னேற்றத்திற்கு முன்னுதாரணம்.

வெள்ளையருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்திற்கு புதிய உத்வேகம் ஊட்டிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இன்று 262-வது பிறந்தநாள். கேட்டாலே சிறுவர்கள் மனதிலும் வீரம் ஊறும் வரலாற்றுக்கு சொந்தக்காரர் கட்டபொம்மன். அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News