உள்ளூர் செய்திகள்
கைது

ராமநாதபுரம் அருகே செல்போன் திருடியவர் கைது

Published On 2021-12-31 14:01 GMT   |   Update On 2021-12-31 14:01 GMT
ராமநாதபுரம் அருகே செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் என்பவரின் மகன் வீரமணிமுத்து (வயது23). கொத்தனாரான இவர் சிலருடன் சேர்ந்து ராமநாதபுரம் வந்து பெரியார் நகரில் உள்ள ஒருவரின் புதிய வீட்டில் கட்டிட பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி ஒருநாள் மட்டும் ஆட்கள் தேவைப்பட்டதால் ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் பகுதியை சேர்ந்த சண்முக வேல் மகன் மணிகண்டன் (27) என்பவர் நிமிந்தாள் வேலைக்கு வந்துள்ளார். இதன்பின்னர் வேலைக்கு வர வில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன் தினம் காலை அந்த கட்டிடத்திற்கு வந்த மணிகண்டன் தனக்கு அவசர தேவையாக உள்ளதால் பணம் தருமாறு கேட்டு ரூ.50 வாங்கி உள்ளார். அந்த பணத்தினை வாங்கி கொண்டு மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு செல்லும்போது வீரமணிமுத்து அந்த கட்டிடத்தில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை திருடிச்சென்றுவிட்டாராம்.

இதனை தொடர்ந்து பேராவூர் சென்று மணிகண்டனிடம் வேலை இருப்பதாக கூறி அழைத்து சென்று கட்டிடத்தில் வைத்துவிசாரித்தபோது திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை ராமநாதபுரம் பஜார் போலீசில் ஒப்படைத்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் செல்போன் கொடுத்து வைத்திருந்தவரிடம் இருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
Tags:    

Similar News