உள்ளூர் செய்திகள்
அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ஆதாரங்களுடன் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணிக்குள் திருப்பூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்:
பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறப்பாக சேவையாற்றிய பெண்களுக்கு முதல்வர் தலைமையில் நடக்கும் மகளிர் தினவிழாவில் அவ்வையார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
எனவே தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட சமூக நலன் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டு பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகத்துறைகளில் பணியாற்றி வருவோர் விண்ணப்பிக்கலாம்.
2021-22ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது பெற, தேவையான ஆதாரங்களுடன் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணிக்குள் திருப்பூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு 0421 2971168 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.