உள்ளூர் செய்திகள்
திருப்பரங்குன்றம் கோவிலில் ஊழியரை தாக்கிய யானை- பக்தர்கள் ஓட்டம்
யானை தாக்கியதில் காயம் அடைந்த கோவில் ஊழியர் புகழேந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பரங்குன்றம்:
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 21-ந்தேதி முதல் எண்ணெய் காப்பு திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் இரவில் திருவாட்சி மண்டபத்தை சுற்றி தெய்வானை அம்பாள் புறப்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று இரவும் திருவாட்சி மண்டபத்தை தெய்வானை அம்பாள் வலம் வந்தார்.
அப்போது கோவில் யானை தெய்வானையும் வலம் வந்தது. இந்த நிலையில் யானைக்கு கோவில் ஊழியர்(பேஷ்கார்) புகழேந்தி பேரீச்சம்பழம் கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஊழியர் புகழேந்தியை யானை தாக்கியது. இதனால் அவர் அலறினார்.
இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து, அங்கிருந்து ஓடினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே யானையை தனது கட்டுப்பாட்டிற்குள் பாகன் கொண்டு வந்து அதன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். யானை தாக்கியதில் காயம் அடைந்த புகழேந்தி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 21-ந்தேதி முதல் எண்ணெய் காப்பு திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் இரவில் திருவாட்சி மண்டபத்தை சுற்றி தெய்வானை அம்பாள் புறப்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று இரவும் திருவாட்சி மண்டபத்தை தெய்வானை அம்பாள் வலம் வந்தார்.
அப்போது கோவில் யானை தெய்வானையும் வலம் வந்தது. இந்த நிலையில் யானைக்கு கோவில் ஊழியர்(பேஷ்கார்) புகழேந்தி பேரீச்சம்பழம் கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஊழியர் புகழேந்தியை யானை தாக்கியது. இதனால் அவர் அலறினார்.
இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து, அங்கிருந்து ஓடினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே யானையை தனது கட்டுப்பாட்டிற்குள் பாகன் கொண்டு வந்து அதன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். யானை தாக்கியதில் காயம் அடைந்த புகழேந்தி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.