உள்ளூர் செய்திகள்
பெரும்பாறை அருகே யானை மிதித்து ஊராட்சி பணியாளர் பலி
பெரும்பாறை அருகே யானை மிதித்து ஊராட்சி பணியாளர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள நல்லூர்காடு மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 51). இவர், பெரியூர் ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக பணிபுரிந்தார். இவருக்கு அப்பகுதியில் காபி தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்துக்கு, நேற்று பிற்பகல் 3 மணிக்கு பழனிசாமி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய மனைவி கோமதி, பழனிசாமியை தேடி தோட்டத்துக்கு சென்று பார்த்தார்.
அப்போது காபி தோட்டத்தின் உள்ளே காட்டு யானை மிதித்து பழனிசாமி இறந்தநிலையில் கிடந்தார். இதனைக்கண்டு கோமதி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் அவர் தெரிவித்தார். இதனையடுத்து கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். அப்போது மீண்டும் காட்டுயானை தோட்டத்துக்கு வந்தது. இதை பார்த்தவுடன், கிராம மக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனத்துறையினரும், தாண்டிக்குடி போலீசாரும் அங்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், பழனிசாமியின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் காட்டு யானை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே முகாமிட்டிருந்தது. இதனால் பழனிசாமியின் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பட்டாசு வெடித்து காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினர். அதன்பிறகே பழனிசாமியின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள நல்லூர்காடு மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 51). இவர், பெரியூர் ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக பணிபுரிந்தார். இவருக்கு அப்பகுதியில் காபி தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்துக்கு, நேற்று பிற்பகல் 3 மணிக்கு பழனிசாமி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய மனைவி கோமதி, பழனிசாமியை தேடி தோட்டத்துக்கு சென்று பார்த்தார்.
அப்போது காபி தோட்டத்தின் உள்ளே காட்டு யானை மிதித்து பழனிசாமி இறந்தநிலையில் கிடந்தார். இதனைக்கண்டு கோமதி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் அவர் தெரிவித்தார். இதனையடுத்து கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். அப்போது மீண்டும் காட்டுயானை தோட்டத்துக்கு வந்தது. இதை பார்த்தவுடன், கிராம மக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனத்துறையினரும், தாண்டிக்குடி போலீசாரும் அங்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், பழனிசாமியின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் காட்டு யானை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே முகாமிட்டிருந்தது. இதனால் பழனிசாமியின் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பட்டாசு வெடித்து காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினர். அதன்பிறகே பழனிசாமியின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.