உள்ளூர் செய்திகள்
சேரன்மகாதேவியில் மர்மகாய்ச்சலுக்கு பெண் பலி
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மர்மகாய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் மரியராஜாமணி. இவரது மனைவி செல்வி (வயது 46). சமீபத்தில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார்.
இந்தநிலையில் நேற்று அவருக்கு மீண்டும் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அவரை சேரன்மகாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே செல்வி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் மரியராஜாமணி. இவரது மனைவி செல்வி (வயது 46). சமீபத்தில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார்.
இந்தநிலையில் நேற்று அவருக்கு மீண்டும் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அவரை சேரன்மகாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே செல்வி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.