உள்ளூர் செய்திகள்
ஊத்துக்குளியில் பனிப்பொழிவால் பொதுமக்கள் பாதிப்பு
திருப்பூர் ஊத்துக்குளியில் கடந்த 10 நாட்களாகவே கடுமையான பனிப்பொழிவு ஏற்படுகின்றது.
ஊத்துக்குளி:
பனிக்காலம் தொடங்கி உள்ளதால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கின்றது. மலைப்பிரதேசங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பனிப்பொழிவு சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த முறை பனிப்பொழிவு அதிகம் உள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளியில் கடந்த 10 நாட்களாகவே கடுமையான பனிப்பொழிவு ஏற்படுகின்றது. இதனால் அதிகாலையில் வாக்கிங் செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் பள்ளிக்கு செல்லும் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.