உள்ளூர் செய்திகள்
மின்சார நிறுத்தம்

எருமப்பட்டி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

Published On 2021-12-20 09:37 GMT   |   Update On 2021-12-20 09:37 GMT
எருமப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
நாமக்கல்:

எருமப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, என்.புதுக்கோட்டை, கோணங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News