உள்ளூர் செய்திகள்
தர்மபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் 60 பேர் மீது வழக்கு
தர்மபுரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரியில் வங்கி முன் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ள நிலையில், உரிய அனுமதியின்றி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள், வங்கி ஊழியர்கள் என மொத்தம் 60 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.