உள்ளூர் செய்திகள்
கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள்.

எந்திரங்கள் இல்லாமல் கழிவுகளை அகற்றும் தூய்மைப்பணியாளர்கள்

Published On 2021-12-18 11:18 GMT   |   Update On 2021-12-18 11:18 GMT
திருப்பூர் சூசையாபுரம் மற்றும் குமரபுரம் பகுதியில் சாக்கடை கால்வாய்தூர்வாரும் பணி நடைபெற்றது.
திருப்பூர்:

கழிவுகளை அகற்ற எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் கைகளாலேயே தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் திருப்பூர் சூசையாபுரம் மற்றும் குமரபுரம் பகுதியில் சாக்கடை கால்வாய்தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் ஈடுபட்ட பணியாளர்கள் எந்திரங்கள் இல்லாமல் கைகளாலேயே கழிவுகளை அகற்றும் பணியில்  ஈடுபட்டனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
Tags:    

Similar News