உள்ளூர் செய்திகள்
ஆழ்வார்குறிச்சியில் பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை
ஆழ்வார்குறிச்சியில் பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூர் பெரியதெருவை சேர்ந்தவர் பட்சிராஜன். இவரது மகன் பாலமுருகன்(வயது 16). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இவரது வீட்டின் எதிரே உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு சென்ற பாலமுருகன் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது பாலமுருகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், கடந்த 3 ஆண்டுகளாக பாலமுருகன் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூர் பெரியதெருவை சேர்ந்தவர் பட்சிராஜன். இவரது மகன் பாலமுருகன்(வயது 16). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இவரது வீட்டின் எதிரே உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு சென்ற பாலமுருகன் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது பாலமுருகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், கடந்த 3 ஆண்டுகளாக பாலமுருகன் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.