உள்ளூர் செய்திகள்
கைது

தஞ்சையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2021-12-15 09:20 GMT   |   Update On 2021-12-15 09:20 GMT
தஞ்சையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (வயது21). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்பேரில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.

இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து சூரியபிரகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சூரியபிரகாசை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News