உள்ளூர் செய்திகள்
பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் வழங்கினார்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சியில் தூய்மைப்பணியாளராக பணிபுரிந்த சாமிநாதன் 2018ம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது மகளான எஸ்.தனலட்சுமிக்கு வாரிசு அடிப்படையில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் வழங்கினார். அப்போது நகராட்சி அலுவலக மேலாளர் சகுந்தலா, நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.