உள்ளூர் செய்திகள்
புளியங்குடியில் தச்சு தொழிலாளி கொலை- நண்பர் கைது
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தச்சு தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி கிணற்று தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 58). இவர் தச்சு வேலை பார்த்து வருகிறார். காந்திபஜார் முடுக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 62). இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
நேற்று இரவு 2 பேரும் டி.என்.புதுக்குடியில் உள்ள பூ மார்க்கெட் அருகே உள்ள டீக்கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த ஊரை சேர்ந்த ராசுக்குட்டி என்பவர் அங்கு வந்தார். அவருக்கும், சுந்தரத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சுந்தரம், ராசுக்குட்டியை தாக்க முயன்றுள்ளார். உடனே அருகில் நின்ற முருகேசன், சுந்தரத்தை தடுத்துள்ளார். மேலும் அவரை திட்டி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரம், முருகேசனை கன்னத்தில் அறைந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் தடுமாறி கீழே விழுந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகேசன் உடலை மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி கிணற்று தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 58). இவர் தச்சு வேலை பார்த்து வருகிறார். காந்திபஜார் முடுக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 62). இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
நேற்று இரவு 2 பேரும் டி.என்.புதுக்குடியில் உள்ள பூ மார்க்கெட் அருகே உள்ள டீக்கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த ஊரை சேர்ந்த ராசுக்குட்டி என்பவர் அங்கு வந்தார். அவருக்கும், சுந்தரத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சுந்தரம், ராசுக்குட்டியை தாக்க முயன்றுள்ளார். உடனே அருகில் நின்ற முருகேசன், சுந்தரத்தை தடுத்துள்ளார். மேலும் அவரை திட்டி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரம், முருகேசனை கன்னத்தில் அறைந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் தடுமாறி கீழே விழுந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகேசன் உடலை மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்தனர்.