உள்ளூர் செய்திகள்
தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

உடுமலை அரசு பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் அகற்றம்

Published On 2021-12-09 10:18 GMT   |   Update On 2021-12-09 10:18 GMT
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தேங்கிய தண்ணீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது.
உடுமலை:

உடுமலை ராஜேந்திர ரோட்டில் அரசு மாணவர் மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா, மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்தநிலையில் உடுமலை பகுதியில் பெய்த கனமழையால் பள்ளி வளாகத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. 

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தேங்கிய தண்ணீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டது. எனவே தண்ணீரை வெளியேற்றி மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல உதவ வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். 
Tags:    

Similar News