உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை-ஜோதிடர் மீது போக்சோ வழக்கு
கைது செய்ய வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டி இருந்தது. இதையடுத்து தலைமறைவான சந்திரசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.
பல்லடம்:
பொங்கலூர் அருகே உள்ள நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 40). ஜோதிடர். இவர் 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்திரசேகர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்ய வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டி இருந்தது.
இதையடுத்து தலைமறைவான சந்திரசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.