உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

Published On 2021-12-08 08:06 GMT   |   Update On 2021-12-08 08:06 GMT
சிறுமி சத்தம் போட்டு அழுதுள்ளார். இதையடுத்து அங்கு வந்த சிறுமியின் பெற்றோர்கள் முதியவரை பிடித்து பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூரை சேர்ந்தவர் குமார்(வயது65). இவரது வீட்டருகே வசிக்கும் 8 வயது சிறுமியை தின்பண்டம் வாங்கித் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் சிறுமி சத்தம் போட்டு அழுதுள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த சிறுமியின் பெற்றோர்கள் முதியவரை பிடித்து பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுமியிடம் குமார் பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News