உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் விவரம் - அவினாசியில் வீடு வீடாக கணக்கெடுப்பு

Published On 2021-12-08 07:35 GMT   |   Update On 2021-12-08 07:35 GMT
தினசரி நகருக்குள் பல்வேறு பணி நிமித்தமாக 15 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
அவிநாசி:

அவிநாசி பேரூராட்சி பகுதியில் தொற்றுப் பரவலை தடுக்க வாரந்தோறும் சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அவிநாசி பேரூராட்சி பகுதியில் தற்போதைய நிலவரப்படி 33 ஆயிரத்து 600 பேர் உள்ளனர். தினசரி நகருக்குள் பல்வேறு பணி நிமித்தமாக 15 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 

‘வாரந்தோறும் நடக்கும் சிறப்பு முகாமில் 800 முதல் 1,000 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். தற்போதைய நிலவரப்படி 95 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். வரும் நாட்களில் வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் விபரம் சேகரிக்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News