உள்ளூர் செய்திகள்
தாசில்தார் அலுவலகத்தில் பெண் ஊழியரின் கைப்பை திருட்டு
மர்மநபர் ஒருவர் செல்வியின் கைப்பையை திருடிக்கொண்டு தப்பியோடி விட்டார். அந்த கைப்பைக்குள் ரூ.5462 பணம் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் தற்காலிக கணினி இயக்குனராக பணியாற்றி வருபவர் செல்வி. இவர் கடந்த 4ம் தேதி வடக்கு தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்துள்ளார். அப்போது பை ஒன்றை கொடுப்பதற்காக அருகாமையில் உள்ள அறைக்கு சென்றுள்ளார்.
இதனை கவனித்த மர்மநபர் ஒருவர் செல்வியின் கைப்பையை திருடிக்கொண்டு தப்பியோடி விட்டார். அந்த கைப்பைக்குள் ரூ.5462 பணம் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன.
இதுகுறித்து செல்வி வடக்கு குற்றப்பிரிவு போலீசில் சி.சி.டி.வி காட்சி ஆதாரத்துடன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மர்மநபர் தற்காலிக ஊழியர் செல்வியின் கைப்பையை திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.