உள்ளூர் செய்திகள்
கமல் ஹாசன்

மாணவர் மர்ம மரணம்: மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் - கமல்ஹாசன் கோரிக்கை

Published On 2021-12-08 06:56 GMT   |   Update On 2021-12-08 06:56 GMT
முதுகுளத்தூர் மாணவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்...நேரம் மாற்றம்: தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

Similar News