உள்ளூர் செய்திகள்
தற்கொலை முயற்சி

கருமத்தம்பட்டியில் மின்கம்பத்தில் ஏறி வடமாநில வாலிபர் தற்கொலை முயற்சி

Published On 2021-12-06 11:30 GMT   |   Update On 2021-12-06 11:30 GMT
கருமத்தம்பட்டியில் வடமாநில வாலிபர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருமத்தம்பட்டி:

அசாம் மாநிலம் குர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் திவாகர் கியூரி (வயது 34). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

திவாகர் கியூரி அசாம் மாநிலத்தில் இருந்து வேலைக்காக கேரளா செல்ல வந்துள்ளார். ஆனால் கேரளா செல்லாமல் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் பகுதியில் தங்கி இருந்து வந்தார்.

இந்தநிலையில் திவாகர் கியூரி இன்று காலை ஊஞ்சப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அருகே வெகு நேரமாக நின்றிருந்தார். அப்போது அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததை பார்த்த அவர் திடீரென மின்கம்பத்தில் ஏறினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை கீழே இறங்க கூறினர். ஆனால் அவர் தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக கூறினார். இதனையடுத்து பொதுமக்கள் உடனடியாக மின்சார துறைக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை நிறுத்தினர். பின்னர் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் அந்த வாலிபரை சமாதானம் படுத்தி கீழே இறக்கினர். பின்னர் போலீசார் திவாகர் கியூரியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாகவும், தனது மனைவி மாயமாகி விட்டதாலும் தற்கொலை செய்து கொள்ள மின்கம்பத்தில் ஏறியதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கருமதம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமாநில வாலிபர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News