உள்ளூர் செய்திகள்
அம்பேத்கர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மலர்தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.

அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சி

Published On 2021-12-06 08:56 GMT   |   Update On 2021-12-06 11:12 GMT
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
காங்கேயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் படியூர் ஊராட்சி அரசு ஆரம்ப பள்ளியில் அம்பேத்கரின் நினைவுநாள்  நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத்,படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா  சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேப்போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 
 
சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள காஷ்மீரில் பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்ட லடாக் பகுதியை மீட்டெடுத்து சிறப்பு அந்தஸ்தான 370 ஏ சட்டப்பிரிவை நீக்கிய மத்திய அரசுக்கு சிவசேனா சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

லடாக் பகுதியை மீட்டெடுத்ததை போற்றும் வகையில் அப்பகுதியில் சட்டமேதை அம்பேத்கரின் முழு உருவ சிலை நிறுவ வேண்டும். லடாக் பகுதியில் எங்கள் சொந்த செலவில் சொந்த நிலம் வாங்க ஒத்துழைப்பும், அந்த நிலத்தில் சொந்த செலவில் அம்பேத்கரின் முழு உருவ சிலை அமைக்க எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். 

இதுபோல் பிரதமருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

Tags:    

Similar News