உள்ளூர் செய்திகள்
கைது

மொரப்பூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

Published On 2021-12-06 07:37 GMT   |   Update On 2021-12-06 07:37 GMT
மொரப்பூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர்:

கம்பைநல்லூர் அம்பேத்கர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் கம்பைநல்லூர் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, லாட்டரி சீட்டு விற்ற நவலை முனியப்பன் (வயது 35), வேலு (43), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல் மொரப்பூர் அருகே உள்ள ஒபிலிநாயக்கன்பட்டியில் லாட்டரி சீட்டு விற்ற ஆறுமுகம் (65), மோகன் (70), ஆகியோரை மொரப்பூர் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News