உள்ளூர் செய்திகள்
வடசேரி பஸ் நிலையத்தில் பஸ் இருக்கையில் மயங்கி விழுந்து தொழிலாளி பலி
வடசேரி பஸ் நிலையத்தில் பஸ் இருக்கையில் மயங்கி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் உமர் வயது 50. இவர் நாகர்கோவிலில் உள்ள புரோட்டோ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார் .நேற்று ஊருக்கு செல்வதற்காக உமர் வடசேரி பஸ் நிலையத்துக்கு சென்றார்.
நெல்லை செல்லும் பஸ்ஸில் ஏறி அவர் அமர்ந்திருந்த போது எதிர்பாராத விதமாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. திடீரென உமர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.