உள்ளூர் செய்திகள்
பள்ளிகளுக்கான தளவாட பொருட்கள் - வெளிப்படை தன்மையை பின்பற்ற அறிவுறுத்தல்
பள்ளிக்கு பெறப்படும் பொருட்கள் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தர மானதாக உள்ளனவா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
திருப்பூர்:
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர் நிலைப்பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் ஆண்டுதோறும் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர பள்ளிக்கு தேவையான கற்றல், கற்பித்தல் பொருட்கள் மற்றும் பள்ளிகளுக்கு தேவையான தளவாட பொருட்கள் வாங்கவும், பயிலும் மாண வர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மானியத்தொகை வழங்கப்படுகிறது.
இதில் பல்வேறு முறை கேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளன. எனவே பள்ளிக்கு பெறப்படும் பொருட்கள் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தரமானதாக உள்ளனவா? என்பதை உறுதிப்படுத்தி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காது முறையாகவும், வெளிப்படையாகவும் விதிகளுக்கு உட்பட்டு செலவினங்கள் மேற்கொள்ள திருப்பூர் உள்பட அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.