செய்திகள்
தற்கொலை

கோவை காந்திபுரத்தில் தங்கும் விடுதியில் பைனான்ஸ் ஊழியர் தற்கொலை

Published On 2021-11-30 09:57 GMT   |   Update On 2021-11-30 09:57 GMT
கோவை காந்திரபுரத்தில் தங்கும் விடுதியில் பைனான்ஸ் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது31).

இவர் குஜராத்தில் உள்ள பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25ந் தேதி விஜயகுமார் கோவை வந்தார். காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.

சம்பவத்தன்று அறையில் இருந்த இவர் நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அறைக்கதவை தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகத்தினர் சம்பவம் குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News