செய்திகள்
பிச்சம்பாளையம்புதூரில் சேதமடைந்த சாலை.

திருப்பூர் மாநகரில் மழையால் சாலைகள் சேதம் - வாகன ஓட்டிகள் அவதி

Published On 2021-11-30 09:54 GMT   |   Update On 2021-11-30 09:54 GMT
இன்று மதியம் 12 மணியளவில் திருப்பூர் மாநகரில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்தநிலையில் இன்று காலை  முதல் திருப்பூர் மாநகர் பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.  

இதன் காரணமாக தெருக்கள் மற்றும் மார்க்கெட்டுகள் மழைநீர் சூழ்ந்ததுடன், சகதிக்காடாக மாறின. இன்று மதியம் 12 மணியளவில் திருப்பூர் மாநகரில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட 16-வது வார்டு பிச்சம்பாளையம்புதூர் நால்ரோடு சந்திப்பு அருகே இருக்கும் ஆர் .கே .நகர் முதல் சாலை கடந்த வருடம் மாநகராட்சி சார்பில் போடப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. 

தற்போது ஒரு வாரம் பெய்த கனமழை காரணமாக புதிய தார் சாலை சேதமடைந்துவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே அதனை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News