செய்திகள்
வெள்ளகோவில் அருகே கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கிய பெட்டகம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
முகாமை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட்டாரம் கம்பளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட லக்மநாயக்கன்பட்டி ஊராட்சி அரசு பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கிய பெட்டகத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, முத்தூர் மருத்துவ அலுவலர் பிரசாத் தாமரைக்கண்ணன், கம்பளியம்படடி நிலைய மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உள்பட மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.