செய்திகள்
கைது

மொரப்பூர் அருகே மது விற்ற 3 பேர் கைது

Published On 2021-11-21 12:28 GMT   |   Update On 2021-11-21 12:28 GMT
மொரப்பூர் அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர்:

மொரப்பூர் போலீசார் ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற அருள் (வயது35), என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், மோட்டூரில் மது விற்ற தில்லைக்கரசி (41) மற்றும் கம்பைநல்லூர் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட நவலையில் மது விற்ற மாதேஸ்வரன் (45), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 77 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News